Tuesday, April 21, 2009

திரும்ப கிடைத்த என் விலா எலும்பு




என் ஆன்மாவுக்குள்ளிருந்து 
இறங்கி வ்ருகிறது ஒரு வார்த்தை 
நெடுநாளாய் பிரிக்கப்பட்ட 
உன்னையும் என்னையும் சந்திக்க.

திறந்த உன் இமைக்குள்ளிருந்து 
நான் வெளிவந்து எட்டிபார்த்தது 
ஓர் புது உலகக்த்தை.

யார் எதைஅடைக்காத்தோம் 
கருவில் சுமந்தோம் 
என தெரியவில்லை 
ஆனாலும் நாம் நம்மை 
 ஈன்றெடுத்தோம்..!

சமாதிக்குள் வைக்கப்பட்ட
 சிரிப்பொலிகளெல்லாம் 
ஒன்றுகூடி கைகோர்த்து 
களிசெய்து புளகமெய்தின, 
பிறகுதான் தெரிந்தது 
அதை உயிரோடே 
சமாதி வைத்திருந்ததும்..
அவைகளும் ந்ம்மோடே
மூச்சடக்கி வாழ்ந்ததும் 

மரணப்படுக்கையில் 
இறுதி மூச்சுக்கு 
போராடியவனுக்கு 
கிடைத்தது முதல் மூச்சு.
வற்ண்ட நாவில் 
ஆகாய கங்கையின் ஊற்று.
விழிகளுக்கு 
பெண்பால் கண்ணனின் விசுவரூபம்

எனக்கு கிடைத்தது 
என்னிலிருந்து 
எடுக்கப்பட்ட 
எனது விலா எலும்பு.. 

No comments:

Post a Comment

Blog Archive

Followers