Monday, May 25, 2009

வாழ்வின் பசி


அந்த
நாற்றங்காலில்
நடப்படுவோமென
எதிர்பார்க்கவில்லை நாம்.

நதிகளின் கசிவும்
மேகத்தின் பொழிவும்
வளர்த்தெடுத்தென நம்மை.

ஈரமண் துளாவி
வேர்நிலைத்த விளைவில்
வான் நோக்கி வளர்ந்தது
பொன் மணிகள்.

நாள் பார்த்துவந்து
அரிவாள் வினை செய்ய
நேசப்பச்சயம்
வெளுக்க வெளுக்க
பாறையில் கொண்டுபோய்
போரடித்தார்கள்.

வாழ்வின் தூற்றலில்
காற்றின் திசையில்
பயணித்த
உமியாக நான்..,
மூட்டைக்குள்
அடைப்பட்ட..
நெல்லாக நீ..!


இந்த கவிதை இளமைவிகடனில் வெளியானது 

 

3 comments:

  1. அருமை
    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  2. நன்றி ப்ரவின்ஸ்கா - கார்த்தின்.

    ReplyDelete

Followers