Thursday, May 28, 2009

மோட்சம்


நிலவு உருகும்
பொழுதொன்றில்
உன்னிடம் வருவேன்
அடைக்கலமாய்..!

அந்த தனியறையில்
மொழித்தேவையில்லா
உரையாடலில்
ஈரம்துளிர்க்கும்
விழி வழி..
உயிர்பெயரும்
நம் உணர்வுகள்..!

காலக்கிரமத்தில்
ஏமாற்றங்களில்
தேய்ந்த
நம் கைரேகைகள்
கலந்துரையாடும்..!

நீளும் நிசப்தத்தில்
மனக்குகையின்
ஆழ்ந்த இருட்டுக்குள்ளிருந்து
திடீரென முளைக்கும்
வெளிச்ச கைகள்
நம்மை கட்டியணைக்கும்..!

புயலுக்கு பின் அமைதியாய்
புறப்படும்
பெருமூச்சொன்றில்
தூக்கியெறியப்படலாம்...
நம் தீரா வேட்கைகள்..!

முகம் மூடிய
உன் சேலை தலைப்பின் வழி
தெரியும்
உன் மலர்ந்த முகத்தின்
சிரிப்பில்..
எனக்கு கிடைக்கலாம்
வாழ்வின் மோட்சம்..!

3 comments:

  1. // நீளும் நிசப்தத்தில்
    மனக்குகையின்
    ஆழ்ந்த இருட்டுக்குள்ளிருந்து
    திடீரென முளைக்கும்
    வெளிச்ச கைகள்
    நம்மை கட்டியணைக்கும்..! //

    நன்றாக இருக்கிறது.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  2. ///முகம் மூடிய
    உன் சேலை தலைப்பின் வழி
    தெரியும்
    உன் மலர்ந்த முகத்தின்
    சிரிப்பில்..
    எனக்கு கிடைக்கலாம்
    வாழ்வின் மோட்சம்..!///

    நன்றாக இருக்கிறது.பிடித்தமாகவும் இருக்கிறது.இயல்பாகவும் இருக்கிறது அந்த நம்பிக்கை.

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

Followers