Sunday, April 5, 2009

மௌனக்கோட்டை


வெளியே எடுக்க வழியின்றி..
யாளியின் வாய்க்குள்
உருளும் கல்லென
நெடு நாளாய்..
என் வாய்க்குள்..
உருட்டிக்கொண்டிருக்கிறேன்
ஒரு வார்த்தையை..,

ஒலிக்கத் துணிவற்று..
பின்வாங்கி பதுங்கி
தொண்டையில் திரண்ட
மௌனத் தேன்கூட்டின்
அடை ஒன்றைப் பெயர்த்து
உன் செவிகளில்..
பிழிய முடியாமலே
நழுவிப் போகிறது காலம்.





நீ மட்டும் என்னவாம்?
நான் உச்சரிக்காத 
அந்த ஒற்றை வார்த்தையின்..
அர்த்தம் தெரிந்தும்
அன்னியமான
வேற்றுமொழி.. அகராதிபோல்
விலகிப் போகிறாய்.

உளியும்.. சுத்தியலும்
ஓசை எழுப்பாமல்..
அந்த முரட்டுப் பாறைக்குள்..
இன்னும்..
உறங்கிக்கொண்டே யிருக்கிறது
ஓர் உயிர்ச் சிலை!


No comments:

Post a Comment

Blog Archive

Followers