Sunday, April 5, 2009

இப்படித்தான்




விழிகள் இடித்து..
உயிரில் அதிர்வு.

மனக்குகை இடுக்கில்
பார்வையின் விதைகள்.

கனவுகளின் மார்பில் பாலருந்தி
விழிப்பூந்தொட்டியில்
துளிர்த்து சிரிக்கிறது..
இதயங்களின் வார்த்தை.

இமை மாறிப் படபடக்கும்
இமைவழி நிகழ்கிறது..
உயிர் மகரந்தச் சேர்க்கை.

வெவ்வேறான வேர்களில்..
ஒரே மாதிரியான
பூவை மலர்த்தித்
தன் இருப்பைக் காட்டுகிறது
காதல்!

No comments:

Post a Comment

Blog Archive

Followers