Saturday, April 11, 2009

அழகின் நிறத்தில் ஆபத்து...


தேவதைகளின் 
தேசத்திலிருந்து
நீ வருவதாய் அறிகிறேன்
.
கறுப்பு நிறப் பூக்கள்
பற்றிய அறிதலற்ற..
என் கவிதைப் பட்டறையில்
ஆய்வுக்குட்ப்பட்டிருக்கிறது..
உன்னிரு விழிகள்.

ஒளிப்பார்வையில்
நிலவுத் துணுக்கும்..
சூரியத் துகளும்
கலந்த விகிதாச்சாரம் பற்றிய
யோசனை என்னுள்.

நெளியும் புருவங்கள்..
வரவேற்புத் தோரணமா?
கறுப்புக் கொடியசைவா?

அழகின் தாகம் தீர
உன்னைத் தொட்டு.. தொட்டு..
மேகச்சீலையில்
சித்திரம் தீட்ட
என் மனத்தூரிகையின் உக்கிரம்.

நீ புன்னகைக்கிற போதெல்லாம்..
பூமிக்கு வசந்தம்,
பேசுகிற போதெல்லாம்..
மொழிக்கு கர்வம்
.
உன் ஒப்பணை அறையின்
நிலைக்கண்ணாடியை
நினைத்து.. நினைத்து..
பற்றியெரியும்..
பொறாமைத்திரியால்..
எப்போதும்.. வெடிக்கலாம்..
என் இதயம்.

1 comment:

Blog Archive

Followers