Sunday, April 12, 2009

விதைப்பும் - அறுப்பும்


அன்றொரு நாள்.. 
மல்லிகை கமழ்ந்த 
இருட்டறை ஒன்றில் 
இருவர்..விளயாட்டாய் 
இன்னொரு இருட்டறையில் 
பதுக்கி வைத்த.. 
ஒளிப்புள்ளியின் 
சுடர்.., 
அசைந்தசைந்து.. 
சுற்றுச் சுவரை 
இடிக்க., 
பின்பொரு நாள் 
கருவூர் பொலபொலத்து 
எங்கும் கலந்தது ஒளி..! 

***********0000***************** 

யார்க்கும் 
சொந்தமற்று 
மெய் மாறி வந்த 
புல்லாங்குழலின் 
உள்ளுக்கு வெளிக்கும் 
நடை நடந்த காற்று., 
நிலைகொண்ட 
ஓர் நாள்..கச்சேரி நின்று.. 
குழந்தையின் கையசைவில் 
துவங்கியது மீண்டும்..! 

மூங்கில் காடெங்கும் 
சுவாசத்தின் சுவடுகள். 

No comments:

Post a Comment

Blog Archive

Followers