
அன்றொரு நாள்..
மல்லிகை கமழ்ந்த
இருட்டறை ஒன்றில்
இருவர்..விளயாட்டாய்
இன்னொரு இருட்டறையில்
பதுக்கி வைத்த..
ஒளிப்புள்ளியின்
சுடர்..,
அசைந்தசைந்து..
சுற்றுச் சுவரை
இடிக்க.,
பின்பொரு நாள்
கருவூர் பொலபொலத்து
எங்கும் கலந்தது ஒளி..!
***********0000*****************
யார்க்கும்
சொந்தமற்று
மெய் மாறி வந்த
புல்லாங்குழலின்
உள்ளுக்கு வெளிக்கும்
நடை நடந்த காற்று.,
நிலைகொண்ட
ஓர் நாள்..கச்சேரி நின்று..
குழந்தையின் கையசைவில்
துவங்கியது மீண்டும்..!
மூங்கில் காடெங்கும்
சுவாசத்தின் சுவடுகள்.
No comments:
Post a Comment