Saturday, April 11, 2009

மறத்தலும்..மறத்தல் சார்ந்தும்...






வெகு நாட்களாய் 
மிக குறுகலானதும் 
இருள் நிறைந்ததும் 
காற்று வந்துபோக 
ஏதுவாய் ஜன்னலுமற்ற 
அந்த 
ஒற்றை வார்த்தைக்குள் 
அடைந்து கிடக்கிறாய் நீ.., 

தட்டி தட்டி.. 
அடைந்த அக்கதவெங்கும் 
என் கைரேகைகள் , 
உதிரப்படரல்க்ள், 
மௌனமான 
அவ்வார்த்தைக்குள்ளிருந்து 
நாராசமாய் உன் அலறல்.., 

இன்னொரு வார்த்தைக்கொண்டு 
உடை அந்த வார்த்தையை. 

வார்த்தைகளுக்கு 
அப்பாற்பட்ட 
வாழ்கையின் விரிவு 
வானமெங்கும்.., 

ஒற்றை வார்த்தையிலிருந்து 
உன்னை 
விடுவிக்க.. 
என் மொழியின் 
அத்தனை 
வார்த்தைகளையும் 
பயன்படுத்திய பின் .. 
எனக்கு புரிவதெல்லாம்.. 

நீ நம் மொழி 
மறந்திருக்க வேண்டும்.. 
அல்லது 
செவிடாகி இருக்க வேண்டும்..! 

No comments:

Post a Comment

Blog Archive

Followers