
எல்லைக்குட்ப்பட்ட
ஆசைகளின் விளிம்பில்..
உனக்கும் எனக்குமான
இடைவெளியை இட்டு நிரப்ப
வார்த்தைகளையும்..
இன்னபிற.. பொருள் தரும்..
குறிப்பறிவித்தல்களையும்..
தேடி.. தேடியே..
கழிகிறது காலம்.
சமயங்களீல்
சொல்லப்படாத வார்த்தைகளை மீறி..
பார்வைகளின் அர்த்தப் பிரவகிப்பில்
நனைகிறோம்.. நாம்.
உதடுகளில்.. ஊனமும்..
மொழி பேசத் துடிக்கும்
கருவிழிகளும் என..
பெருமூச்சில் ஓங்கிக் கலந்து..
கரைகிறது..
நம் எல்லையற்ற நேசம்
நாம் பேச நினைப்பதெல்லாம்..
யாரோ பேச..
கேட்க கூடுமோ நாம்..?
No comments:
Post a Comment