Sunday, April 12, 2009

ஆரண்யம்..



அடர் வனம் அதிர
இழை தழை 
சரசரக்க..

சார்ந்தூறும்..
மண்வெளி புழுதியில்
அடங்கா விரகத்தை..
வரைந்து..
சீறியது..
 சர்ப்ப இணையொன்று..

உஷ்ஷென..
தலை தூக்கி..
நெம்பி நிமிர்ந்து..
உடலுள் உடல் தோய..
பிணைவதை..
காணல் பாவமென
அகன்றான் பாம்பாட்டி..,

நீட்டிய துப்பாக்கி
வெடித்ததிர
தோலுரித்து போனான்..
வியாபாரி..,

கலாச்சாரம் விழுங்குது
நாகரீக பாம்பு..,
வணிகமல்ல பாம்பாட்டல்..
ஆனால்..
வித்தையாச்சு..
வணிகம்..!

No comments:

Post a Comment

Blog Archive

Followers