"உன் மீதென்ன
இவ்வளவு கறைகள்?"
"வெறும் கறைகளல்ல..
ரத்தக் கறைகள்..இவை..!
கொலை வெறிக் கரங்களின்
பாவம் துடைக்கும்..
கைகுட்டை ஆகிவிட்டேன் நான்..!"
" உன்னை கழுவ
அந்த ஆண்டவன் வரவில்லையா..?"
"சந்தன திருநீற்று
அர்ச்சனையில் மூர்ச்சையுற்று..,
மந்திர உச்சாடனத்தின்..உச்சஸ்தாயில்
செவிப்பறை கிழிந்து..,
உயிர் வெளுக்க..
உடல்களை அடித்து துவைக்கும்..
ஆற்றோரக்கல்லாய்..
ஆனபின்பு..
ஆண்டவனெங்கே வருவது
என்னைக் கழுவ..?
ஆமாம்..
உன் நிழலில்
அந்த தாய் பசு இளைப்பாறுகிறதா..?"
" இல்லை..இல்லை..
என்னை..இழுத்து..இழுத்து..
சோர்ந்துபோய் செத்துக்கிடக்கிறது.."
"முறையிட்ட குரலுக்கு
மன்னன் வரவில்லையா..?"
"த்ன் மகனின்
மகுடாபிஷேகத்தில்..
மார் தட்டிக்கொண்டிருக்கிறான்."
ஒவ்வொரு வரிகளும் கவனிக்கப்படவேண்டியவை
ReplyDelete