Thursday, April 16, 2009

வீடு திரும்புதல் குறித்து



வாழ்வின் 
ஒப்புமையற்ற தன்மைக்கு 
உவமானம் வேண்டுமா..? 

வாழாததில் வாழும் 
கனவு அது. 
இருப்பதாய் காட்டும் 
இல்லாமையின் 
இருப்பு அது. 

ஓடும் பெரு நதியில் 
எங்கோ ஓரிடத்தில் 
சட்டென குமிழ்ந்து 
பட்டென வெடிக்கும் 
நீர் குமிழ் அது. 

உடனிருப்பதாய் காட்டி 
உபயோகப்படாத 
நிழல் அது 
சூரிய சூட்டில் 
சலவையாகும் 
பனித் துளி அது. 

காரிருள் வானில் 
பளிச்சென தோன்றி 
நொடியில் மறையும் 
மின்னல் அது. 

நிழலாய் தொடரும் 
பிறவியை அறுப்போம் 
விழலெனப்போகும் 
வாழ்வின் கணங்களை 
முழுமையில் மூழ்கி 
மூச்சடக்கி 
பிறவா நிலையின் 
முத்தெடுத்து 
புறப்பட்ட இடத்தின் 
முகவரி தேடி 
திரும்பும் வீட்டுக்குள் 
பத்திரமாய் 
ஒளித்துவ்வைப்போம். 

No comments:

Post a Comment

Blog Archive

Followers