Sunday, April 5, 2009

இரவுக்கு தாலாட்டு



தூக்கம் வராத
இரவுப் பொழுதொன்றில்
நான் தூங்காததால்..
நீயும் தூங்கி இருக்க மாட்டாய்
என்றெண்ணி..
தொலைபேசி வழி அழைக்கிறேன்
உனைத் தூங்க வைக்க...,

நான் தூங்கிவிட வேண்டுமென..
நீ 
தொலைபேசியை எடுக்காததன்
நீட்சியில்...
நானும் தூங்க எத்தனிக்கையில்

என் தொலை பேசிவழி
நீ அழைக்கிறாய்..,

பேசிப் பேசியே தூங்க வைத்தோம்
அந்த இரவை!

No comments:

Post a Comment

Blog Archive

Followers