
நினைவு விரல்களால்
தலைக்கோதுவதை நிறுத்து..
கண்களின்
பனிக்குடம் உடைய
ரத்தக் கவுச்சியடிக்க
தொப்புள்கொடி சுற்றிப் பிறக்கும்
கனவுப் பிரசவங்களுக்கு
சீம்பாலாய்
இன்னும் எத்தனை நாளைக்குத்
தருவது..
பிரிவின் கண்ணீரை?
தலைக்கோதுவதை நிறுத்து..
கண்களின்
பனிக்குடம் உடைய
ரத்தக் கவுச்சியடிக்க
தொப்புள்கொடி சுற்றிப் பிறக்கும்
கனவுப் பிரசவங்களுக்கு
சீம்பாலாய்
இன்னும் எத்தனை நாளைக்குத்
தருவது..
பிரிவின் கண்ணீரை?
போதும்.. போதுமென
கிறு கிறுக்கிறேன் நான்..,
என் உடல் பொருள்.. ஆவியின்
அத்தனை வாயிலும்..
வழிந்து கொட்டுகிறது..
வரிந்து.. வரிந்து..
நீ ஊட்டிய பிரிவு!
இந்த கவிதை யூத்ஃபுல்விகடன் டாட்காமில் வெளியானது
No comments:
Post a Comment