Saturday, April 11, 2009

கட்டுப்படாத காற்று.






அன்றொரு நாள்..
வெளி ஜன்னலில்
அடிக்கடி வீசிய இளங்காற்று...
எதிர்பாராத நாளொன்றில்..
உள்பாய்ந்து,
கனவுப் பூக்கள் நெய்த
திரைச்சீலயை வருட..
உறக்கம் விழிப்பானது!
 
பின்பொரு நாள்..
அதே காற்று..
வந்த சுவடு மறந்து.. வெளியேறிய
நனவின் புழுக்கத்தில்..
விழிப்பும் உறக்கமானது,

வந்து போன.. காற்றின் நினைவாய்..
கதவிடுக்கில்..
கரயான்புற்று!

No comments:

Post a Comment

Blog Archive

Followers