
என்னில் உன்னை
விதைத்த
விழாக் காலத்திற்குப் பிறகான
விபரீதங்களை
விவரித்தாக வேண்டும் நான்,
விழிகளை.. செவிகளை.. உயிரை..
ஊடுருவிய..
வயிற்றின் பசி..
உன் பிம்பம் கண்டும்..
குரல் கேட்டும்
அடங்கிப்போன அதிசயம்.
தனிமை இருட்டின்
அடர் வண்ணம் தொட்டு
படுக்கை விரிப்பெங்கும்..
உறக்கம் பிடிக்காத
உடல் தூரிகையால்
புரண்டு.. புரண்டு..
வரைந்த் சித்திரங்கள்..
உன் நினைவு லாயத்தில்
சுருள
எண்ணப் பொதி சுமக்கும்..
மனம்..
குரும்பாடாய்.. பட்டிக்குத் திரும்பும்
யதார்த்தம்.
very nice lines
ReplyDelete