
அந்திப் பொழுதொன்றில்..
உயிர் கொண்ட
வீட்டுக் குழல் விளக்கினோரம்
ஒளி அண்டி ஒதுங்கிய
சிறு பூச்சியொன்றை..
பதுங்கிக் காத்திருந்து..
பல்லி விழுங்கியதைக்
கண்டு பதைத்த..
அதே நொடி..
அறுந்து விழுந்தது
பல்லியின் வால்,
மீளாப் பூச்சியின்
வாழ்வுக்கு..
ஈடாகக் கூடுமோ?
திரும்ப முளைக்கும் வால்..
வருடுகிறது..!
ReplyDelete