
தாளகதிக்குட்பட்ட
வட்டப்பாதையொன்றில்
நெடுநாளாய்..
ஒருவரையொருவர்
பிடித்துவிடும்
முயற்சியில்
சுற்றி சுற்றி
ஓடுகிறோம் நாம்..,
நொடிகளின் சங்கமத்தில்
சுழற்றியடிக்கப்பட்டு..
பிரிவின்
குருதிபொங்கும்
காலடிச்சுவடுகளை
சுட்டி சுட்டி..,
வாட்டும் ஏகாந்தத்தின்
வேதனையின் பிளிரல்
மணிக்கொருதரம்..,
எப்போதோ..
யாரோ..தந்த
உயிர் சாவியின்
எச்சத்தில்..
'டிக்..டிக்..டிக்..' என
உருகி வழிகிறது..
சுவற்றுச் சிலுவையில்
அறையப்பட்ட..
நம் தீராக் காதல்..!
இந்த கவிதை யூத்ஃபுல் விகடன்.காமில் வெளியானது
No comments:
Post a Comment