Sunday, April 12, 2009

கண்மூடி பார்த்தல்




இயற்கை பெருநிலையில் 
ஆன்மாவின்சலவை 
பற்றில் தோயும் 
ஆசைஅலைவை 
உணர்த்தும் 

பொருள்வெளி 
புழுதியை 
புறம்தள்ளி 
மறுதலித்தால் 
புரியும்.. 
தேடுபொருளில் 
புதைந்த நிஜம்..! 

ஆயும் மனச்சுடரை 
அணைத்தாயிற்று., 
பொல்லாத் தனம் எனும் 
அடிமைக் கட்டுக்குள் 
பிணைத்தாயிற்று.. 

திரவியத்தின் திசையில்.. 
உள்ளதெது..? 
அல்லதெது....? 
மனகேமராவின் 
கோணத்தை மாற்றினால் 
துல்லியப்படும் 
பார்க்க துடித்ததும்.., 
பார்க்க கிடைத்ததும்.., 
பார்க்க பணித்ததும்.., 

ஆசையின் சிலுவையில் 
அறையப்பட்ட.. 
ஆன்மாவை அறுத்தெடுக்கட்டும்.. 
உள்முக தேடலின் 
உன்னத தியானம்..! 
பிறகு தெரியும் 
புதுப் பாதையில்.., 
தேடலுக்கான போராட்டம் ஒழிந்து.. 
துவங்கிவிடும்.. 
அமைதியின்.. 
ஞான நர்த்தனம்...! 


1 comment:

Blog Archive

Followers