
ஏதோ ஒரு புள்ளியில்தான்
அது
துவங்குகிறது..,
வளைந்து நெளிந்து
சுருங்கி நிமிர்ந்து
இணைப்பு புள்ளித் தேடி
தொடர்கோடாய்
கிளைத்து வளர்ந்து..,
பூரணப்பட்ட பின்..
தனக்கென வாழாமல்
பிறர்க்கென வாழ்வதில்
அர்த்தப்படுகிறது..
கோலம்..,
மாறாய்..
தனக்கென மட்டுமே
வாழ்ந்து..
அலங்கோலமாகிறது
வாழ்கை.
nice
ReplyDelete